கொரோனா மரணங்களும் கையாலாகாத அரசுகளும் !
April 18, 2021 - selvamani-t
April 21, 2021,12:31:44 AM
மக்களின் பாதுகாப்பில்,சுகாதாரத்தில்,வாழ்வாதாரத்தில் துளியும் அக்கறை இல்லாத மோடி அரசு மதவாதத்திலும்,கார்ப்பரேட்,பார்ப்பனிய நலனை மட்டுமே தனது பணியாக கொண்டுள்ளது.இத்தகைய பாரதிய ஜனதா கட்சியின் முட்டாள்தனத்தை,மடமையை இந்திய மக்கள் உணரவேண்டும்.
சாதிய படுகொலைகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கையை அரசும் காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும்,பாரபட்சமின்றி சாதிய படுகொலையை நிகழ்த்தும் அனைத்து குற்றவாளிகளும் கைதுசெய்யப்பட வேண்டும்.
பெண்ணுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கும் பெற்றோர்கள் தங்களுடைய ஆண்பிள்ளைகளையும் திரும்பி பாருங்கள்,பெண் ஒரு சக மனுஷி என்கிற அடிப்படை புரிதலை ஏற்படுத்துங்கள்.இனியும் இந்த மண்ணில் ஆண் ஆதிக்க வெறியில் பெண்கள் மாய வேண்டாம்.
முக்தி,மோட்சம் கிடைக்கும்,என்கிற கற்பனையான பகுத்தறிவுக்கு ஒப்பானதா மூடப்பழக்கங்களால் !எத்தனை உயிர்கள் பலியாகுமோ ! இந்த நாட்டின் அதிகாரம் சாமானிய சிறுபான்மை தலித் மக்களை ஒடுக்குவதற்கு மட்டும் தானா ?
மாபெரும் தமிழ் தேசிய தலைவர் ஒருவரை தமிழகம் மறந்து விட்டது,பொது மக்கள் மட்டுமல்ல,தமிழ் தேசியம் பேசும் குறிப்பாக நாங்கள் தான் தமிழ் உரிமையை மீட்க போகும் மீட்பர்களாக தங்களை கட்டிக்கொள்ளும்,தமிழ் தேசியத்திற்கு அத்தாரிட்டி வாங்கி வைத்து கொண்டிருக்கும் கட்சி தலைவர்கள் கூட வாய் திறக்க வில்லை.
கடந்த 12 வருடங்களாக நிகழ்த்தி வரும் தமிழ் ஸ்டுடியோவின் உழைப்பின் பலனை தமிழ் சினிமா தற்போதே கண்கூட பார்த்து தான் வருகிறது.இன்னும் பல ஆண்டுகளுக்கு செவ்வனே தனது பணிகளை இந்த இயக்கம் நிச்சயம் ஆற்றிவரும் ,இந்த இயக்கத்தோடு இணைந்து உங்களையும்,இந்த சமூகத்தையும்,தமிழ் சினிமாவையும் மேம்படுத்தும் பணியில் இட்டு நிரப்பிக் கொள்ளுங்கள்.
உண்மையின் பக்கம் நிற்பது தான் அறம்,இந்த நேரடி களஆய்வில் இது சாதிய அரசியல் படுகொலை என்பது உறுதியாகிறது ஆனால் தங்களது நயவஞ்சக வெறிச்செயல் எல்லோருக்கும் அம்பலப்பட்டு விட்டதை மறைக்க பாமக நிறுவர் ராமதாஸ் அவர்களும் அன்புமணி ராமதாஸ் அவர்களும் மாற்றி பேசுகிறார்கள்,மறுப்பு தெரிவிக்கிறார் அதிமுக தரப்பு மவுனத்தை தருகிறது.
மூடநம்பிக்கைகளையும்,முட்டாள்தனங்களையும் களைய வேண்டிய கடமை நிச்சயம் ஒவ்வொரு ஜனநாயக பணி ஆற்றும் தோழர்களுக்கும் உள்ளது,ஆக அவர்களிடமும் பெரியார்,அம்பேத்கர் அவர்களின் அறக்கருத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டும்.
அண்ணல் இன்று நம்மிடையேயே இல்லை அவரின் புத்தகங்களும்,எழுத்துக்களும்,பேச்சுக்களும்,எண்ணங்களும்,சிந்தனைகளும்,அவர் விட்டு சென்று யாரும் பணியும் நம்மிடம் தான் உள்ளன அவற்றையெல்லாம் எடுத்துக் கொள்வோம் அவர் மீட்க போராடி உயிர்நீத்த மனித மான்பை நாம் மீட்போம்!
அதிகார வர்க்கத்தின்,அநீதி இழைப்போரின் கைக்கூலிகளாக இருப்பதை தவிர்த்து காவல்துறை மனிதத்தை மனிதர்களை நேசிக்கும் பணியாளர்களாக பணியாற்ற வேண்டும்
திருமாவளவன் பின் படித்தவர்கள் நிற்பதில்லை என்று அவர் கூறிய அடுத்த வினாடியில் ஒரு மருத்துவர் நான் படித்தவன் தோழர் திருமா மக்களுக்கான தலைவர் நான் அவர் பக்கமே !என்று வலைத்தளத்தில் பதிவிட அது தீயாக பரவி டாகடர்,வக்கீல்,பொறியாளர்,ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் என சாதிப்பாகுபாடுகள் இல்லாமல் ஆயிரக்கணக்கான பதிவுகளை தற்போது வரை வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இது போன்ற சம்பவங்களை பயன்படுத்தி கலவரங்களை தூண்டி தனது செல்வாக்கை ஓட்டு வங்கியை பலப்படுத்த முயலும் அரசியல் வியாபாரிகளுக்கு மத்தியில் அறம் சார்ந்த அரசியல் தலைவராக நிற்கிறார் தோழர் திருமா!
1968ம் ஆண்டு முதல் கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் தேசிய திறன் பயிற்சி நிறுவனம் மத்திய அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 500க்கும் அதிகமான மாணவர்கள் தொழிற்கல்வி பயின்று வரும் இந்த மத்திய அரசின் பயிலகத்தின் முகப்பு பெயர் பலகையில் தமிழ் மொழியை புறக்கணித்துள்ளனர்.
இந்த அநீதிகள் இன்று நேற்றல்ல பல காலமாக நடந்தே வருகிறது ,தங்களின் சுயலாபத்துக்காக சாதி வெறியினால் மத வெறியினால் மனிதத்தை சிதைத்தே வருகிறார்கள்,மதத்தை ,சாதியை காரணம் காட்டி மக்களும் இந்த நயவஞ்சகர்களுக்கு ஆதரவாக நிற்பது ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து,இந்த அவலங்களை அவற்றின் அடிப்படையான சாதியை,மதத்தை சனாதனத்தை சிதைக்காமல் அறம் சாத்தியப்படாது.
பாமக என்கிற கட்சியின் அரசியல் இலாபத்துக்கு,சாதி வெறிக்கு இரண்டு குழந்தைகள் தந்தையை இழந்து உள்ளார்கள்.
இந்த வன்முறை கும்பலை பாட்டாளி மக்கள் கட்சியை தடை செய்தால் தான் தமிழகத்தின் சட்ட ஒழுங்கையும் அமைதியையும் பாதுகாக்க இயலும்
பாமக நிறுவனர் ராமதாசின் குடும்பம் பல தலைமுறைக்கு சொத்துக்களைக் குவிப்பதற்காக இரண்டு தலைமுறை வன்னியர்களை கூலிப்படையாக இயக்கி வருகிறார்,வன்னிய மக்களின் மூளை சலவை செய்து சாதிய நஞ்சை விதைத்து தங்களின் சுயலாப அரசியலுக்கு அடியாட்களாகவே பயன்படுத்துகிறார்.
தமிழ் சினிமாவில் கதாநாயகர்களாக ஆண்களை தான் பெரும்பாலும் காட்டுவார்கள் ஆனால் நடிகை ரோகிணி போன்றோர் தான் உண்மையான நாயகர்கள் !
ஒரு தேர்வுக்கு செல்வதென்றால் பேனா,பென்சில்,ஸ்கெல்,ரப்பர் என்கிற தேர்வுக்கு அத்தியாவசியமான பொருட்கள் அவசியம்,அப்படி தேர்தலுக்கு செல்லும் போது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை எடுத்து செல்வதோடு மட்டுமல்லாது,கடந்த 5 ஆண்டுகளில் நடந்த அக்கிரமங்களையும் மனதில் எடுத்துக் கொண்டு தேர்தலுக்கு செல்லுங்கள்.அனைவரும் வாக்களியுங்கள் அது சனநாயக கடமை.
தற்போது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்களே வன்னியர்களுக்கான 10 சதவீத உள் ஒதுக்கீடு என்பது தற்காலிகமானதே என்றும் அறிவித்துள்ளார்.
ஒரு கட்சியுடைய தேர்தல் அறிக்கையானது அந்த கட்சியினுடைய வெற்றிக்கே வழிவகுக்க வேண்டும் ஆனால் ஒரு கட்சியினுடைய தேர்தல் அறிக்கையானது பெருத்த அதிர்ச்சியையும்,அக்கட்சிக்கே பாதகமாவும் அமைந்துள்ளது அதன் சாராம்சங்களை பார்ப்போம்!
இவர்களால் ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்ய இயலாது ,தினசரி நாளிதழில் முதல் பக்க விளம்பரம் கொடுக்க இயலாது,தொலைக்காட்சிகளிலும்,யூ டியூப்பிலும் விளம்பரம் தர இயலாது ஏன் தேர்தலுக்கு சுவரொட்டி வரைய கூட இவர்களிடம் காசு கிடையாது,இவர்களால் ஓட்டுக்கு பணம் கொடுக்கவும் முடியாது ஆனால் இவர்கள் மக்களின் பிரச்சனைக்காக குரல் கொடுப்பார்கள்,மக்களின் பிரச்சனைக்கு களம் இறங்கி போராட்டம் செய்வர்,சனநாயகத்தின் பக்கம் நிற்பர்,எப்போதும் மக்களை பற்றியே சிந்தித்து மக்களோடு நிற்பர்,இவர்களுக்கு பணம் பொருட்டல்ல,புகழ் தேவையில்லை மக்கள் மக்கள் என்றே முழங்குவர் ஆம் இவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர்
இன்னும் 7 நாட்கள் தான் உள்ளது தமிழகத்தின் 234 தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர்களையும் ,தமிழத்தின் முதல்வரையும் தேர்ந்தெடுக்கப்போகும் சட்ட மன்ற தேர்தல் நடைபெற அதற்குள் எத்தனை கேளிக்கைகள் பிரச்சார களத்தில் அரங்கேறுகிறது பார்த்தீர்களா !
ஒரு கட்சி தனது தலைவரின் பெயரை புகைப்படத்தை மறைத்து ஓட்டு கேட்பது என்பது அவலத்திலும் அவலம் அல்லவா! அதாவது அவருடைய பெயரையும்,புகைப்படத்தையும் பயன்படுத்தினால் ஒட்டு விழாது என்றால் அத்தனை மோசமான ஒருவரா அவர்! அப்படி பட்டவர் கட்சியில் ஏன் இருக்கிறீர்கள் ?
இந்த காலகட்டத்தில் தனியார் துறையிலும்,பெண்களுக்கும் சேர்த்து பிரதிநிதித்துவத்தை பெற்று தர குரல் எழுப்புவதே சரியாக இருக்கும் !அதை விட்டு விட்டு வீணர்கள் எழுப்பும் இந்த வெற்று பிதற்றலுக்கு யாரும் இறையாகாதீர்!
வட இந்தியாவில் வண்ணமயமான ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது அதன் ஒரு பகுதியாக இன்று சஹாரன்பூரில் வேளாண் மசோதாவின் நகலை எரித்து ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர் விவசாயிகள்.
இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அணைத்து வேட்பாளர்களின் வாழ்க்கை நிலையாக உள்ளது,இன்னமும் குடிசை வீட்டில் வாழும் சட்ட மன்ற வேட்பாளரை கொண்டது தான் கம்யூனிஸ்ட் கட்சி ,
ஒரு புறம் இலவசம் பற்றிய அறிவிப்புகள்! இன்னொரு புறம் இலவசங்கள் இல்லை கல்வியும்,மருத்துவமும் மட்டும் தான் இலவசம் என்றும் இலவசங்கள் கொடுத்து மக்களை அடிமையாக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் இலவசங்கள் இழிவென்றும் பேசி வருகிறார்கள்.நாம் கேள்விக்கு வந்து விடுவோம் இலவசங்கள் சரியா தவறா!
மீண்டும் ஒரு எழுச்சியாக வடஇந்திய விவசாயிகளின் போராட்டத்தை வலு படுத்தும் விதமாக,அவர்களுக்கு ஆதரவாக உத்திரபிரதேசத்திலும்,பீகாரிலும் போராட்டங்களை மீண்டும் துவங்கியுள்ளனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என கூறப்பட்ட வாக்குறுதியை,மிக கேவலமாக விமர்சிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பேராவூரணி திலீபன் பேசியுள்ளார்.
பாஜக செய்துள்ள இந்த பச்சைத் துரோகத்துக்கு தமிழக மக்கள், பாஜகவுக்கும் அதன்கூட்டணி கட்சிகளான அதிமுக, பாமக ஆகியவற்றுக்கும் சரியான பாடத்தை இந்தத் தேர்தலில் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இத்தனை அநீதிகளை அரங்கேற்றி வரும் பாஜக,அதிமுக கூட்டணியை புறக்கணிப்போம்!இந்த அநீதிகள் அரங்கேறும் போதெல்லாம் மக்களோடு மக்களாக களம் இறங்கி போராடிய விடுதலை சிறுத்தைகள்,கம்யூனிஸ்ட் காட்சிகள்,மதிமுக,தமிழக வாழ்வுரிமை கட்சி ,திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்போம் !
இத்திட்டங்களை நிறைவேற்றிட விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து பாடுபடுவதுடன், தொகுதியை தரம் உயர்த்தும் வேட்கையுடன் களத்தில் உள்ளனர்.எனவே, உங்கள் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளருக்கு பானை சின்னத்தில் பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெறச் செய்ய அன்புடன் வேண்டுகிறோம்.
வருகின்ற தேர்தலானது மதவெறி/சாதிவெறி அரசியலை வளர்க்கின்ற பாஜகவிற்கும், ஏனைய சனநாயக ஆற்றல்களுக்கும் இடையேயான தேர்தலாக அமைந்திருக்கிறது. எனவே பாஜகவையும், அதனோடு கூட்டணி அமைத்திருக்கின்ற அதிமுகவையும் மே17 இயக்கம் முற்றிலும் நிராகரித்து, அவர்கள் படுதோல்வி அடையச் செய்யவேண்டுமென தமிழக மக்களை மே17 இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவிய துணைவேந்தர் மீது விசாரணை வைக்க வேண்டும் எனவும், மாணவர்களின் புகாருக்கு நடவடிக்கை எடுக்கத் தவறிய பதிவாளர் மீதும், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கிய பேராசிரியர்கள் மீதும், மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்ட காவல் ஆய்வாளர் சீதாராமன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுக்கிறோம்.
எம்பிபிஎஸ் படிக்கவும், பல் மருத்துவ படிப்பிற்கும் ஏற்கனவே நீட் (NEET) என்னும் தேசிய நுழைவுத் தேர்வு உள்ள நிலையில், வரும் கல்வியாண்டு முதல் நர்ஸிங், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட அனைத்து மருத்துவம் சார்ந்த படிப்பிற்கும் நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது மோடியின் பாஜக அரசு
ஒரு நோயால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80,000 பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் அதில் 50 சதவீதம் பேர் மரணத்தை தழுவுகிறார்கள் .இதுக்கு முக்கியமான காரணம் பெண்களின் அறியாமை ,அலட்சியம்
இந்தியாவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் அதுவும் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது மார்பகப் புற்றுநோய் தான் அதை பற்றி முழுமையாக இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
நான், பெரிய நடிகர்களை வைத்துப் படமெடுத்தாலும், அதை என் படமாகவே எடுக்க முயற்சிக்கிறேன்.ஆர்யா நடித்தாலும், அது ஜனநாதன் இயக்கியபடம். ஜெயம் ரவி நடித்தாலும் அது ஜனநாதன் இயக்கிய படம்.
இதனை நன்குணர்ந்துள்ள வன்னியர்சமூக மக்களும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் இந்தத் தேர்தலில் பாஜக- அதிமுக- பாமக கூட்டணியைப் படுதோல்வி அடைய செய்வார்கள். அதன் மூலம் உரிய பாடத்தை அவர்களுக்குப் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நல்ல தலைவர் இல்லை ,நல்ல தலைவர் இருந்தால் நாங்கள் நிச்சயம் அவருக்கு வாக்களிப்போம் என்று பேசும் நடுநிலையாளர் கண்களுக்கு இவர் தெரிய மாட்டார் ஏனென்றால் சாதி என்னும் கொடிய அழுக்கு படிந்த ,நாற்றமடிக்கும் கண்ணாடியை அணிந்து கொண்டு இவரை பார்க்கிறார்கள் ,கடந்த தேர்தலில் இவர் எப்படி வென்றார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்
அரசியல் நோக்குக்காக சாதியை ,மதத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் ஜனநாயகத்துக்கு எதிரான இப்படியான நிகழ்வுகளை தடை செய்ய வேண்டும் .இவர்களின் நயவஞ்சகத்தை அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொண்டு அவர்களை புறக்கணிக்க வேண்டும் .
நியாயம் கேக்குறவங்கள எல்லாம் தேச விரோதிகள்னு சொன்ன எப்படி சார்னு இமைக்கா நொடிகள் படத்தில் இயக்குனர் அனுராக் காசியப சொல்லியிருப்பார் ,தேச விரோத சக்திகளிடம் ஆட்சி இருந்தால் மக்களுக்காக நிற்கும் ஒவ்வொருவரும் தேசவிரோதிகள் எனவே முத்திரை குத்தப்படுவர் ,இதை வெகு சனம் புரிந்து கொண்டு அவர்களுக்கு எதிராக முத்திரை குத்துவதும் ,அவர்களை முற்றிலும் புறக்கணிப்பதுமே இந்த ஜனநாயக படுகொலைகளுக்கு தீர்வு !
பிள்ளையை பெற்று விட்டோம் வளர்ப்போமே என்பது போல் அல்லாமல் இன்னும் வீரியமாக ,அழுத்தமாக ,சமத்துவ ,சமுகநீதி ,சனநாயக கருத்தியலையும் கலைவழி கொண்டு செல்வதில் முனைப்பு கட்டினால் சென்னை திரைப்பட விழாவும் உண்மையில் மெச்சத்தகும் ,
என் முன்னால் எப்படி நீ உட்கார்ந்து பீடி குடிக்கலாம் என்று கேள்வி கேட்டு வெட்டியிருக்கிறார். இது அப்பட்டமான சாதிய வன்மம் மிக்க கொடிய சம்பவம்
தனக்கு கிடைத்த சாகித்ய அகாடமி விருது தொகையில் 99,997 ரூபாயை ரயிலில் அடித்து கொலை செய்யப்பட ஹாஃபிஸ் குடும்பத்திற்கு வழங்கியுள்ளார் எழுத்தாளர் ராமானுன்னி .
சென்னை பெரும் சேரியில் இருந்து வீடுகளை இடித்து வலுக்கட்டாயமாக 40கிமீ தூரத்தில் நகருக்கு வெளியே வீசி கொட்டப்பட்ட மக்களுக்காக பேசுகிறேன்
ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தங்கள் உறவினரின் காதணி விழாவுக்கு சென்று காரில் திரும்பி வந்துள்ளனர் ,வரும் வழியில் அவர்களின் கார் காவல்துறை அதிகாரிகளால் நிறுத்தப்படுகிறது, விசாரணை என்கிற பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தாடை உடைக்கப்பட்டுகிறது ,இதை ஊடகங்கள் பெரிது படுத்தவில்லை காரணம் சாதி .
நீண்ட இரவுக்கு பின்னே விடியல் பிறக்கும் என்பது போல ,வட இந்திய விவசாயிகளின் இந்த இடைவிடாத போராட்டமே பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயக ஆட்சி இந்தியா முழுமைக்கும் அமைய வழி வகுக்கும் .
தனது பாடப் புத்தகங்களுக்கு அப்பால், வகுப்பறைக்கு அப்பால் கல்வியை விரிவுபடுத்துகிற மாணவரே சிறந்த மாணவராக இருப்பார். அவர் சமூகத்தில் இருந்தும் கல்வியைப் பெறுகிறார். அந்தக் கல்வி புத்தகங்களிலிருந்து கிடைக்கக்கூடியது அல்ல.
காட்டுமன்னார்கோயில் ,கஞ்சங்கொல்லை அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை இறக்கி விட்டு வன்னியர் சங்க கொடியை சில இளைஞர்கள் ஏற்றியுள்ளனர் .இதை தட்டிக்கேட்ட நான்கு மாணவர்களையும் அந்த இளைஞர்கள் அடித்துள்ளனர் .
கொலை குற்றவாளிகள் ,கொள்ளையர்கள் ,வன் கொடுமை செய்ப்பவர்களை எல்லாம் கைது செய்வதென்பது தற்போது,மாறி அரசின் அதிகார வர்க்கத்தின் அநீதிகளை தட்டிக் கேட்டால் தடாலடியாக வழக்கு போட்டு கைது செய்து அடக்குமுறையை ஏவுவது வாடிக்கையாகி விட்டது நம் இந்திய திருநாட்டில் .
நம் சென்ன்னையிலேயே மூன்று துறைமுகங்கள் உள்ளது .இது போதாது என்று 6112 ஏக்கர் பரப்பளவில் அதானி துறைமுகம் ஒன்றை விரிவாக்கம் செய்ய அரசு அனுமதித்துள்ளது ,இது விரிவாக்கம் அல்ல புதிய துறைமுகம் உருவாக்குவதாகவே இருக்கும் என அப்பகுதி மக்களும் சுற்றுச் சூழல் அறிஞ்சர்களும் குற்றம் சாட்டுகிறார்கள் .
இந்தியா முழுமைக்குமான எதிர் புரட்சியை அம்பேத்கர் கனவு கண்ட அந்த எதிர் புரட்சியை ,பெரியார் கனவு கண்ட அந்த சமூக நீதியை ,ஜீவா தோழர் கனவு கண்ட அந்த சமத்துவ சமூகத்தை முழுமையாக செயல்படுத்தும் நாள் வரும் என்பதை நான் நம்புகிறேன் .அதற்கான முன்னோட்டம் தான் இந்த சாசனம் !
கடந்த பத்தாண்டுகளாக பணிப்பாதுகாப்பு கோரி போராடியும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் தமிழ்நாடு அரசு இவர்களது கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. இதனால் தற்போது சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று 13வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசே கிராமம் தோறும் சிகை திருத்தும் நிலையங்களை துவங்குவோம் அச்சமூக மக்களை அரசு பணியில் நியமிப்போம் !என்கிற வாக்குறுதியை அரசியல் காட்சிகள் கொடுக்க முன்வர வேண்டும்,அப்படி செய்து காட்டினாள் அது இந்தியாவுக்கே முன்னுதாரணமாக அமையும் .
ஐனநாயகத்தின் பிரதிநிதிகளான தமிழக எம்பிக்கள் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்ட குரலை எழுப்பினார்கள், வேளான் சட்டங்களை திரும்ப பெருக, நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் நிற்போம் என்கிற அவர்களின் குரல் ஜனநாயகத்தின் குரலாக இந்தியா முழுக்க ஓங்கி ஒலித்தது...
சமத்துவத்தை, சமூகநீதியை சனநாயகத்தை சினிமா என்னும் பெரும் கலைத்துறையில் எவ்வித பொருளாதார பலனும் இன்றி பொது நலத்தோடு விதைக்க களமாடும் தமிழ் ஸ்டுடியோவின் ஒவ்வொரு முன்னெடுப்பையும் கொண்டாட வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாயேயாகும்!
தமிழக ஆளுநர் ஏழு தமிழர் தொடர்பாக எடுத்திருக்க கூடிய முடிவு ,மாநில அரசை அவமதிப்பது மட்டுமல்லாது இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே அவமதிக்கும் என்பதே அதன் அர்த்தம் !
இந்த நெருக்கடி காலத்தில் மக்களுக்கான ஒரு படைப்பை சிறுகதைகளை எழுதி, வெளியீட்டு விழாவை வருகிற 10-1-2021 அன்று தோழர்கள் முன்னிலையில் உங்களோடு பிரசாத் லேபில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது..
2020 யில் கொரானா மட்டுமே கோரத்தாண்டவம் ஆடியதா? என்றால் வழக்கமாக இந்திய தேசத்தில் தலைவிரித்தாடும் சாதியும், மதமும் கொரானா காலத்திலும் ஓய்வெடுக்காமல் தன் கொடூரத்தை காட்டிக் கொண்டே வந்தது. பெரும் மனித இழப்பை நோய்த்தொற்று கொடுத்து வந்தாலும் சாதி வைரசும் அதன் தாக்கத்தை நாளுக்கு நாள் கொடுத்துக் கொண்டேதான் இருந்தது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளரும் அமைப்பின் முழுநேர ஊழியருமான தோழர்.எஸ்.கருணா என்கிற 'கருப்பு கருணா' உடல்நலக் குறைவு காரணமாக திங்களன்று (21.12.2020) இயற்கை எய்தினார் என்பதை அறிவீர்கள்.
மக்களை பாதிக்கும் இந்த குழுவின் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்த கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை ஐஐடியை முற்றுகையிடும் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (22--12--2020) நடைபெற்றது.
சிலிண்டர் விலையை வானளவு உயர்த்தி,நடுத்தர மற்றும் ஏழை மக்களின் சோற்றில் மண் அள்ளி போட்டுள்ள மோடி அரசை கண்டித்து,இன்று (19/12/2020) கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 25 நாட்களுக்கும் மேலாக மக்கள் விரோத மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் கோடிக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்நிலையில் கடும் குளிருக்கும்,நோய் வாய்ப்பட்டும்,விபத்திற்கு உள்ளாகியும் இதுவரை 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்ட களத்தில் பலியாகியுள்ளனர்.
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து வட இந்தியாவை போராட்டக்களமாக கடும் குளிரில் வீதிகளில் லட்சக்கணக்கான மக்கள் இறங்கி போராடிக் கொண்டிருக்கும் சூழலில் ஓடி ஒளிந்து விட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்களை பற்றி பார்ப்போம்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், உலக்குடி என்ற ஊரில் தலித்களுக்கு முடி திருத்திய காரணத்தினால் முடிதிருத்தும் தொழிலாளி ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் சாதி வெறியர்களால் ஊர் விளக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கவும் ஆரம்பித்துள்ளனர்.ஆனாலும் அவர்களால் பள்ளி படிப்பை தாண்ட முடியாத நிலை உள்ளது ஏன் தெரியுமா?
இன்றைக்கும் சாதியை ஆதரிக்கும் பலர் இம்மண்ணில் இருக்கிறார்கள். அதனால உங்களுக்கு என்ன பிரச்சனை, எனக்கு என் சாதி பெருமை தான் முக்கியம் என பெருமிதம் கொள்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள், அப்படிப்பட்டவர்கள் இந்த செய்தியைப் படித்துவிட்டு உங்கள் முகத்தில் நீங்களே உமிழ்ந்து கொள்ளுங்கள்.
சென்னை தீவுத்திடல் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பூர்வகுடி மக்களின் வீடுகளை இடித்து அவர்களை அப்புறப்படுத்தும் வேலையை அதிமுக அரசு செய்து வருகிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பகுதியில் வசித்து வரும் மக்கள் வீடு இல்லாமல் போனால் அவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும்?
நீங்கள் காலம் காலமாக வாழ்ந்து வரும் உங்கள் வீட்டை திடீரென அரசு இயந்திரம், காவல்துறையின் அடக்குமுறையோடு வந்து இடித்தால் உங்கள் நிலை என்னவாகும்! இதே நிலையில் தான் சென்னையில் பல ஆயிரம் தலித் குடும்பங்கள் தன் வாழ்வை நடத்திக் கொண்டிருக்கின்றன..
உண்மையிலேயே மாணவர்களின் வாழ்வை உயர்த்தும் ஆசிரியர்களை கண்டுபிடித்து அங்கீகரிப்பதற்கான ஒரு முயற்சி அதில், சர்வதேச அளவில் ஒரு இந்தியர்கள் முதலிடம் பெற்றுள்ளார். யார் அவர்?
மத்திய பாரதிய ஜனதா அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 10,000 கோடி செலவில் 277.3 கிலோமீட்டர் தொலைவுக்கு சேலம் மற்றும் சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க முடிவு செய்தது மத்திய அரசு, மாநில அரசும் தன் விசுவாசத்தை காட்ட அத்திட்டத்தை ஒப்புக்கொண்டது.
தீண்டாமைச்சுவர், ஆணவப்படுகொலை, சாதிக்கலவரம் என்று தினம் தினம் சாதியின் பெயர் கொண்டு நடக்கும் அநீதிகளை கண்டும் காணாமலும் அமைதி காப்பது எத்தகைய அயோக்கியத்தனம். இவைகளை விடவும் உச்சமாக பட்டியல் மக்கள் அனுபவிக்கும் ஒரு கொடூரம் இறந்த சடலங்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாமல் இருக்கும் நிலை.
பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களின் வாழ்வுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டே தான் வருகிறது ஆனால் ஒட்டுமொத்த இந்திய மக்களின் அடிப்படையான உணவின் மீது கை வைக்கும் செயலில் ஈடுபட்ட மத்திய அரசை எதிர்த்து மக்கள் சீறி எழுந்துள்ளார்கள். ஆயிரம் பேருடன் தொடங்கிய போராட்டம் இப்போது பல கோடி மக்களால் பங்கு கொள்ளும் விதத்தில் நடந்து வருகிறது பஞ்சாப், ஹரியானாவில் பற்றிய தீயை இப்போது நாடு முழுவதும் பரவியுள்ளது.
தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றதுஆளுநரை கண்டித்தும், தாமதமாக படும் நீதியும் அநீதி என்றும் கூறி போராடிக்கொண்டிருந்த 150க்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை காவல்துறை கைதுசெய்தது, ஆர்ப்பாட்டத்திற்கு கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை கு. ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார்.
நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது ஆனால் அந்த நடிகருக்கு அரசியல் தெளிவு, சமூகம் பற்றிய புரிதல், கள செயல்பாடுகள், மக்களுக்காக களத்தில் நின்று உள்ளார்களா? என்று மக்கள் கேட்பதும் ஜனநாயக உரிமை தான் இந்திய நாட்டின் விவசாயிகளை ஒன்று கூடி நின்று போராடி வருகிறார்கள்! அதை பற்றி வாய் திறந்தாரா?
உழைக்கும் மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் பேரிழப்பு. அதோடு மட்டும் அல்ல இதே நாளில் தான் இந்த தேசத்தின் இறையாண்மையும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது, இந்துத்துவா மத வெறியர்களால் திட்டமிட்டு பாமர் மசூதி இடிக்கப்பட்டதும் இதே நாளில் தான்.
கடந்த 2012 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்பவரும் செல்லம் கொட்டாய் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இப்படியெல்லாம் ஒட்டுமொத்த இந்திய மக்களும் தனது வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கிய பிரச்சினைகளை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் போது மௌனம் காத்த மருத்துவர் ராமதாஸ் அவர்கள் இப்போது ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளார்...
ஒரு பள்ளிக்கூட வகுப்பறையில் அப்பள்ளியின் ஊழியர் வந்து யார் யாரெல்லாம் ஸ்காலர்ஷிப் வாங்குகிறார்கள் என்று கேட்கும்போது ஸ்காலர்ஷிப் வாங்கும் மாணவர்கள் தயங்கி, தயங்கி எழுந்து நிற்கிறார்கள் அவர்கள் மனதிற்குள் இருக்கும் பயம் நமது சாதி தெரிந்துவிடுமே என்ற அச்ச உணர்வு அவர்களின் நாணத்துக்கும், தலைகுனிவிற்கும் காரணமாய் அமைகிறது கல்வி உதவி தொகை என்பது அவமானகரமான ஒன்றா?
இட ஒதுக்கீடு இல்லை என்றால் இந்த நாடு எப்போதோ முன்னேறி இருக்கும், சாதி சான்றிதழை கிழித்து போட்டால் சாதி ஒழிந்துவிடும் என்று பேசுகிற அறிவாளிகள் நிறைந்த நம் மண்ணில் இன்று வரையிலும் இட ஒதுக்கீடு என்றால் என்ன?
சமீபகாலமாக பாய்காட் என்கிற வார்த்தையை சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் அதிகமாக நாம் பார்த்திருக்கலாம் அதற்கு மிக முக்கியமான காரணம் மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ள வெறுப்புணர்வு, சகிப்புத்தன்மையின்மை தான்.
ஒரே ஒரு நாள் தண்ணிர் யாருக்கும் கிடைக்காது ஏதோ ஒரு பூகோள மாறுபாடு ஏற்பட்டு உள்ளது என்று ஒரு அறிவிப்பு வருகிறது என்னவாகும்?
நீங்கள் பசியில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் வேகமாக ஒருவர் வந்து உங்கள் தட்டை பிடுங்கினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த தட்டையும் மத்திய அரசு பிடுங்குகிறது.
ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டு மிக எளிதாக எல்லோர் கைகளிலும் கிடைத்து வருகிறது. விளையாட்டு மக்களை உற்சாகப்படுத்தவும், பொழுது போக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மனதைப் புத்துணர்ச்சியாக்கவும் உருவானது. எந்த ஒரு நல்ல செயல்பாட்டிலும் தீமையை விதைக்கும் நயவஞ்சக உலகில் விளையாட்டிலும் சூது என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள்
கலை மனித வாழ்வின் ஆத்மார்த்தமான கொண்டாட்டம், மக்களின் வலி, காதல், கோபம், இயலாமை, உரிமை சமத்துவம் என அனைத்து இயல்புகளையும் காட்டுவதற்கான வழித்தடம் அதன் நவீன நீட்சியாக சினிமா.
உத்திரபிரதேசம் இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் 80 மக்களவை தொகுதிகளையும், 404 சட்டமன்ற தொகுதிகளின் கொண்டது. தாஜ் மஹால் ,ஆக்ரா கோட்டை என்கிற அழகிய கட்டிடங்களை தன்னகத்தே கொண்டது அழகியல் ஒருபுறம் என்றால் இதன் ஒட்டுமொத்த உள்புறமும் பல வரலாற்றுக் கறைகள் நிறைந்தது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவு இந்தியாவில் முடிவுக்கு வருகிறது. மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் கொண்டுவந்துள்ள சட்டத்தின் படி கழிவுகளை அகற்ற இனி இயந்திரங்கள் கட்டாயம்!
கொலைக் குற்றவாளிகளும், கொள்ளைக்காரர்களும், குற்றமிழைத்த அரசியல்வாதிகளும், வெகு இயல்பாக நம் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், பத்திரிகையாளர்களும் எளிதில் வெளிவர முடியாத அளவுக்கு கடினமான வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார்கள்.
சென்ற ஆண்டு டிசம்பர் 2 ஒரு தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து தன் வீட்டை தந்தையை இழந்த பெண் சிறுமி எனக்கு நோட்டு புக்கு கொடுத்தா என் அம்மாவை காப்பாற்றுவேன், என் அப்பாதான் போயிட்டாரு என்று கண்ணீர் மல்க பேசிய காணொளி பார்க்கும் அனைவர் கண்களையும் கலங்க செய்தது. பொதுமக்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்பட்ட அந்த தீண்டாமைச்சுவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் எடுக்கப்பட்டு மிரட்டி மீண்டும், மீண்டும் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கொடூரத்தை செய்த குற்றவாளிகளுக்கு இன்றுவரை எந்த தண்டனையும், தீர்ப்பும் வழங்கப்படாத நிலையில் அதேபோன்று புதுச்சேரியில் பண்ணை வீட்டில் 5 சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது...
தேனாறு பாயுது செங்கதிறு சாயுது ஆனாலும் மக்கள் வயிறு காயுது என பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் எழுதியிருப்பார். அதுதான் நம்முடைய இன்றைய நிலை உலக வல்லாதிக்க நாடுகளான அமெரிக்கா, ரஷ்யாவே இந்த கொரோனா தொற்றால் முடங்கி பொருளாதார சரிவை சந்தித்து தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் இந்த நிலையில் தான் நம் மத்திய அரசு 20,000 கோடியை புதிய பாராளுமன்றம் கட்ட ஒதுக்கியுள்ளது...
ஒவ்வொரு புத்தகமும் அழகாய் சிரிக்கிறது என்றால் அதற்குப் பின்னே அதை மலரச் செய்து தன்னை வருத்திக் கொண்ட பதிப்பாசிரியரின் கண்ணீர் நிச்சயம் ஒளிந்திருக்கும். படைப்புலகம் என்பதே கடினம் நிறைந்ததுதான் பொழுதுபோக்கை, வெற்றுக்கூச்சலை மட்டுமே சிலாகிக்கும் தற்கால தலைமுறைக்கு மத்தியில் கருத்தாழம்மிக்க புத்தகங்களை பதிவிட்டு வெளியிடுவது என்பது எத்தகைய சிரமத்தை கொடுக்கும் என்றாலும் அதை சிரமமாக எண்ணாமல் எதிர்கால தலைமுறையை பண்படுத்த நாம் செய்யும் பணி, நம் கடமை என்று எண்ணி அரை நூற்றாண்டு காலம் தமிழ் உலகில் களம் கண்டவர் க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள்.
தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் பேசு பொருள் என்னவென்றால் அமெரிக்க அதிபர் தேர்தல் தான் அதிலும் குறிப்பாக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தான் இப்போது இவர்களுடைய லேடி சூப்பர் ஸ்டார் அவரை கொண்டாடித் தீர்க்கும் தமிழகம், நம் தமிழ் மண்ணில் நம்மோடு பிறந்து வளர்ந்த சக மனிதர்களை மனிதர்களாக கூட பார்க்காது ஒடுக்கும் வன்கொடுமையை என்னவென்று சொல்ல?
ஏன் ஒருவனை அடக்கம் செய்யும் மயானத்தின் கூட சாதிய பிரிவுகள் உள்ளன இப்படியான நிலை இருக்கிறதே இதைவிட கொடூரம் வேறு உண்டா என்று கேட்டாள் நான் நிச்சயம் உண்டு என்றுதான் கூறுவேன் சாதியை காரணம் காட்டி சடலத்தை கூட எடுத்துச் செல்ல வழியில்லாமல் வயல்வெளியில் தூக்கி செல்லும் மக்களின் துயரத்தை தான்...
திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் ஒரு நேர்காணலில் பேட்டி அளித்து இருப்பார் விசாரணை திரைப்படத்தினை 22 பார்ட் களுக்கும் மேல் கூட எடுக்கலாம் என்று கூறியிருப்பார்.
அறிவியல் யுகத்திலும் சாதியின் தாக்கம் குறைந்தபாடில்லை நித்தம் பல பிரச்சனைகள். சாதி பெயரை சொல்லி திட்டுவது,சாதிய சண்டைகள், தீண்டாமைச் சுவர், ஆணவப்படுகொலைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, வன்புணர்வு என சாதியின் பெயரிலான கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.
யாராவது சாதி ஒழிப்பை பற்றி பேசினாலோ? சாதி பிரச்சனைகள் குறித்து பேசினாலோ? அறிவுடைய சமூகத்தின் வாதம் என்னவென்றால்.! இப்பலா யாரு சாதி பாக்குறா?
என் மகனை மீண்டும் சிறை செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் அற்புதம்மாளின் உருக்கமான பேட்டி,
ஒரு மிகப்பெரிய மரம் கீழே விழுந்து விட்டது ஒரு பறவையின் சிறகு முறிந்துவிட்டது என்று சென்ற வருடம் இதே நாளில் இயக்குநர் அருண்மொழி அவர்களின் மறைவையொட்டி இயக்குனர் மிஷ்கின் கண்ணீருடன் கூறினார்.
தோழர் முனைவர், திருமாவளவனை ஆதரித்தும் மானுடத்திற்கு எதிரான மனுவை எதிர்த்தும் தமிழ் ஸ்டுடியோ மற்றும் தம்மம் சிந்தனையாளர் பேரவை இணைந்து நடத்தும் ஒருங்கிணைப்பு விளக்கக் கூட்டம் ஆறு மணி அளவில் திணை நில வாசிகள் நாடக குழுவின் பெண்ணியத்தை மையப்படுத்திய நாடகத்தோடு சிறப்பாகத் தொடங்கியது.
இந்திய வரலாற்றை எடுத்துக் கொண்டால் அதை இரண்டாக பிரித்து காட்ட இயலும் ஒன்று சனாதனம் மற்றொன்ரு அதை எதிர்க்கும் சனநாயகம்.
April 18, 2021 - selvamani-t
April 18, 2021 - selvamani-t
April 17, 2021 - selvamani-t
April 16, 2021 - selvamani-t
April 16, 2021 - selvamani-t
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreApril 21, 2021 - சினிமா
April 21, 2021 - சினிமா
April 21, 2021 - சினிமா
April 21, 2021 - சினிமா
April 21, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.