திருப்பு முனையை ஏற்படுத்தியதா ? சென்னை சர்வதேச திரைப்பட விழா !
February 26, 2021 - selvamani T
March 3, 2021,1:56:36 PM
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுவந்த பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோல் முடிவடைந்த நிலையில் நாளை (டிசம்பர் 13) புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோது குண்டு வைத்து கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 7 பேரும், 28 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனைப் பெற்று வரும் நிலையில், ‘அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ், 7 பேரையும் விடுதலை செய்யும் விஷயத்தில் ஆளுநருக்கு உரிமை உள்ளது' என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி, தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், 7 பேரின் விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி அதைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரை செய்து அனுப்பிவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், ஆளுநர் அந்தத் தீர்மானத்தின் மீது ஒரு வருட காலமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருந்தார்.
கடந்த அக்டோபர் 18ஆம் தேதி 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனின் உடல் நிலை மற்றும் அவரது தந்தையின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டும் பேரறிவாளனின் தங்கை மகளின் திருமணத்திற்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது. அந்த பரோல் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், நாளை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.
February 26, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 19, 2021 - selvamani T
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreMarch 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.
Leave Comments