கொரோனா மரணங்களும் கையாலாகாத அரசுகளும் !
April 18, 2021 - selvamani T
April 20, 2021,7:06:21 PM
எதிர்வரும் 9ஆம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்குச் சென்னையில் நடைபெறவுள்ள தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுத்திருக்கிறது மே 17 இயக்கம்.
இதுகுறித்து அவ்வியக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , “தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு வரும் ஜூன் 9 ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டை கடந்திருக்கிறோம். ஆனால் இனப்படுகொலைக்கான நீதி என்பது தொடர்ச்சியாக மறுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
காலப்போக்கிலான பல்வேறு நிகழ்வுகளினூடாக இனப்படுகொலை மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்த இக்காலத்தில் நம் தமிழர்களுக்கு நடந்திருக்கிற இந்த இனப்படுகொலை என்பது மிகவும் கொடூரமானது. இந்த இனப்படுகொலையை நாம் மறப்பதென்பது மேலும் பல படுகொலைகளைச் செய்யக் கூடிய பெரும் பலத்தினை கொலையாளிகளுக்கும், வல்லரசுகளுக்கும் கொடுக்கும்.
இந்த இனப்படுகொலையை இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மறக்கமாட்டோம் என்பதை நாம் சொல்லவேண்டியிருக்கிறது. நினைவேந்துவது நம் பண்பாட்டு மரபு. நினைவேந்தலை தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைப்பட்ட நிகழ்வாக மாற்ற வேண்டும். இதில் நாம் பல்லாயிரக்கணக்கில் குடும்பம் குடும்பமாய் திரண்டு நிற்க வேண்டும். உலகில் எந்த இனமும் தமக்கு நிகழ்ந்த பேரவலத்தினை 10 ஆண்டுகளில் சாதாரணமாகக் கடந்ததில்லை. நாம் இனப்படுகொலையை மறக்கப்போவதில்லை என்பதை உலக சமூகத்திற்கு உரக்க சொல்லப்போகிறோம். ஒவ்வொரு ஆண்டும் நாம் கூடிக் கொண்டே இருப்போம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழர் கடலில் நினைவேந்தலை நடத்தத் தமிழக அரசு மறுத்து வருகிறது. மறுப்புகளைத் தாண்டி நம் உரிமையைக் கோர வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. தமிழர் கடலின் முன்பே உள்ள நமக்கு ஒதுக்கப்பட்டுள்ள சேப்பாக்கம் கலைவானர் அரங்கிலிருந்து நாம் கூடுவோம். இனப்படுகொலையை மறக்க மாட்டோம் என்ற பெருஞ்செய்தியை உலகுக்கு தெரிவிப்போம்.
சாதி, மத வேறுபாடுகளைத் தூக்கி எறிந்து விட்டு தமிழராய் குடும்பத்தோடு வாருங்கள். இது உங்கள் வீட்டு நிகழ்வு. இது நம் சமூகத்து நிகழ்வு. ஜூன் 9 மாலை 4 மணிக்கு சேப்பாக்கம் கலைவாணர் அரங்கின் முன்பு கூடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
April 18, 2021 - selvamani T
April 18, 2021 - selvamani T
April 17, 2021 - selvamani T
April 16, 2021 - selvamani T
April 16, 2021 - selvamani T
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreApril 20, 2021 - சினிமா
April 20, 2021 - சினிமா
April 20, 2021 - சினிமா
April 20, 2021 - சினிமா
April 20, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.
Leave Comments