திருப்பு முனையை ஏற்படுத்தியதா ? சென்னை சர்வதேச திரைப்பட விழா !
February 26, 2021 - selvamani T
March 3, 2021,11:03:03 AM
அரசியல் நோக்கத்திற்காகவே இலங்கைத் தமிழ் அகதிகளை இந்தியாவிலேயே வைத்திருக்க முயற்சிகள் நடப்பதாக இந்தியாவுக்கான இலங்கை உயர் ஆணையர் ஆஸ்டின் பெர்ண்டோ குற்றம்சாட்டியிருக்கிறார்.
1980களில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தினாலும் போரின் காரணமாகவும் சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் தஞ்சம் கோரி தமிழ்நாட்டிற்கு வந்தனர். அதில் சுமார் 70 ஆயிரம் அகதிகள் முகாம்களிலும் 30 ஆயிரம் அகதிகள் முகாம்களிற்கு வெளியிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இதியாவில் உள்ள இலங்கை அகதிகள் குறித்து புதுதில்லியில் வெளிநாட்டு பத்திரிகையாளர் சங்கத்தில் பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்த இந்தியாவுக்கான இலங்கை உயர் ஆணையர் ஆஸ்டின் பெர்ண்டோ, இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு வர வேண்டும் என விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
இன்று தமிழ்நாட்டில் உள்ள 1 லட்சம் அகதிகளில் 20 முதல் 30% பேர் இந்தியாவிலேயே வசிக்க விரும்புவதாக கூறியுள்ள ஆஸ்டின் பெர்னாண்டோ விரைவில் முகாம்களில் உள்ள அகதிகளை சந்திக்கயிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அதே சமயம், அகதிகளை கூடிய விரைவில் திரும்பப் பெற்றுக்கொள்வோம் என்றும் இந்தியா மற்றும் இலங்கை இடையே அகதிகள் திரும்புவது தொடர்பான பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என்றும், அரசியல் நோக்கங்களிற்காகவே அகதிகளை இந்தியாவிலேயே வைத்திருக்க முயற்சிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த காலங்களில், முன்னாள் தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அகதிகளை திருப்பி அனுப்பும் இந்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதே போல் திமுகவும் அவ்வாறான முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆஸ்டன் பெர்னாண்டோ இதற்கு முன்னதாக, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் செயலாளராக பணியாற்றியிருக்கிறார். அதற்கு முன்பு, இலங்கை மறுவாழ்வு, பொது நிர்வாகம், உள்துறை, மாகாண கவுன்சல்கள் துறையின் செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
February 26, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 19, 2021 - selvamani T
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreMarch 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.
Leave Comments