திருப்பு முனையை ஏற்படுத்தியதா ? சென்னை சர்வதேச திரைப்பட விழா !
February 26, 2021 - selvamani T
March 3, 2021,11:01:22 AM
இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பேணுதல், பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமை விடையங்களை மேம்படுத்துதல் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு முழுமனதுடன் ஏற்றுக்கொண்டது. மேலும் இந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளவற்றை நிறைவேற்றுவோம் என்றும் ஐநா சபையில் வாக்குறுதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது. இதனால் எதிர்வரும் மார்ச் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் அதற்குப் பதிலளிக்க வேண்டிய நிலை உள்ளது.
இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில், மீண்டும், ஒரு தீர்மானத்தை ஜெனிவாவில் கொண்டு வரும் முனைப்புகள் தீவிரமடைந்திருக்கின்றன.
இப்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா அங்கம் வகிக்காததால், பிரித்தானியாவின் தலைமையில் சில நாடுகள் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம், அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் தமிழ் மக்கள், சிவில் சமூகம், அரசியல் தலைமைகளின் கருத்துக்களை அறிவதற்காக, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவரும், இந்தியாவுக்கான இணைப்பாளருமான பேர்கஸ் ஔல்ட் இலங்கைக்கு அனுப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கை சென்றுள்ள அவர், கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை, சந்தித்துப் பேசியிருந்தார்.
இதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் யாழ். மாநகர முதல்வர் இமானுவல் ஆர்னோல்ட் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மேலும் பல அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து கருத்துக்களை அறிந்து வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரக அதிகாரிகளின் துணையுடன் கருத்தறியும் முயற்சியில் பேர்கஸ் ஔல்ட் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
ஜெனிவாவில் முன்னெடுக்கப்படவுள்ள நகர்வுகளுக்கான முன்னேற்பாடாகவே இவரது சந்திப்புகள் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இம்முறை இலங்கைக்கு பிரித்தானிய ஐநா தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பில் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
February 26, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 19, 2021 - selvamani T
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreMarch 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.
Leave Comments