திருப்பு முனையை ஏற்படுத்தியதா ? சென்னை சர்வதேச திரைப்பட விழா !
February 26, 2021 - selvamani T
March 3, 2021,2:08:02 PM
கால் மேல் கால் போட்டு அமர்ந்ததற்காக ஆணவ சாதியினரால் தாக்கப்பட்ட சுந்தருக்கு அரசு வேலையும், ரூ.5 இலட்சம் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ளது கோடாங்கிப்பட்டி. இந்த கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், தேவர் சாதியைச் சேர்ந்தவர்களும், இன்னும் பிற மற்ற சாதியைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அருந்ததியர் தெருவில் வசித்துவரக்கூடிய சுந்தர் என்பவர் தன் வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த கண்ணன், மனோஜ் ஆகிய இருவரும் ”எங்கள் முன்னரே திமிராகக் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறாய். சக்கிலி பய உனக்கு அவ்வளவு தைரியமா” என அரிவாளை எடுத்துவந்து சுந்தர் மீது சரமாரியாக வெட்டியுள்ளனர். கண்ணன், மனோஜ் ஆகிய இருவரும் தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த சுந்தரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் அங்குச் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதனையடுத்து தலித் சமூகத்தைச் சேர்ந்த சுந்தர் மீது தாக்குதல் நடத்திய சாதி வெறியர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்ப்புலிகள், ஆதித்தமிழர் பேரவை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற பல அமைப்புகள் நீதி கேட்டுப் போராடி வருகின்றனர்.
இந்தச்சம்பவம் குறித்து களத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட எவிடன்ஸ் அமைப்பு, மேற்சொன்ன சம்பவத்தை உறுதிப்படுத்தி, பின்வரும் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
அவை,
* குற்றவாளி மனோஜ் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
* பாதிக்கப்பட்ட சுந்தருக்கு அரசு வேலையும், ரூ.5 இலட்சம் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும்.
*மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
February 26, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 19, 2021 - selvamani T
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreMarch 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.
Leave Comments