எனக்கு நீ சரிசமமா ?
February 20, 2021 - selvamani T
February 26, 2021,7:04:32 PM
சென்னை நந்தனம் கல்லூரி மாணவர் மணிகண்டன் நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியையும் அதன் வழியாகச் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையைப் பலரும் எதிர்த்துவருகின்றனர். சேவைத் துறையாக இருந்த கல்வித் துறையை வர்த்தக துறையாக மாற்ற ஆளும் பாசிச பாஜக முடிவெடுத்திருக்கிறது. மையமாக்குதல், சாதியமயமாக்கல், வணிகமயமாக்கல் ஆகிய மூன்று கருத்துக்களை மையப்படுத்தி இந்த புதிய கொள்கை முறை இருப்பதாகவும், அனைத்து மக்களுக்குமான கல்விக் கொள்கையாக இல்லாமல், இது கல்வியைச் சர்வதேசச் சந்தையில் கடைவிரிக்கும் கார்ப்பரேட் நலனாக இருக்கிறது என்றும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புகள் வழுபெற்றுவருகிறது. 3, 4, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு, 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்குப் பருவ தேர்வு (செமஸ்டர்) ஏழை மாணவர்களைக் கல்வி கற்கவிடாமல் தடுக்கும் அத்தனை வழிமுறைகளும் இந்த புதிய கல்விக்கொள்கை முறையில் இருக்கிறது. அதனால் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரித் தொடர் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்தவண்ணம் உள்ளன.
இந்த புதிய கல்விக் கொள்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்ற நிலையில், அந்த புதிய கல்விக் கொள்கை வரைவறிக்கையில் இருக்கிற ஒரு திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடைபெற்றுவந்த நிலையில், 2019-2020 கல்வியாண்டிலிருந்து 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இந்த திட்டத்தை எதிர்த்து சென்னை நந்தனம் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் துறையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் மணிகண்டன் கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினார். இதனால் கல்லூரி நிர்வாகம் மணிகண்டனைக் கல்லூரியிலிருந்து நீக்கியுள்ளது. கல்லூரி படிப்பை முடிக்க இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் கல்லூரி நிர்வாகம் இத்தகைய செயலை செய்திருக்கிறது.
இதுகுறித்து, ”அறவழியில் போராட்டம் நடத்தியதற்காக மாணவர் மணிகண்டனின் ஜனநாயக உரிமையை ஒடுக்குவது சட்ட விரோத செயலாகும். இது மணிகண்டனின் கல்வி உரிமையைப் பறிக்கும் நடவடிக்கை. இதனால் நந்தனம் கல்லூரி நிர்வாகம், மாணவனின் நீக்கத்தை ரத்து செய்யவேண்டும்” என்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 19, 2021 - selvamani T
February 19, 2021 - selvamani T
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreFebruary 26, 2021 - சினிமா
February 26, 2021 - சினிமா
February 26, 2021 - சினிமா
February 26, 2021 - சினிமா
February 26, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.
Leave Comments